ADDED : டிச 29, 2024 06:29 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி: வரஞ்சரத்தில் மதுபாட்டில் விற்றவரை போலீசார் கைது செய்தனர்.
வரஞ்சரம் சப்-இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் மற்றும் போலீசார் நேற்று காலை ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, வரஞ்சரத்தை சேர்ந்த வினையத்தான் மகன் சுந்தரவடிவேல்,65; என்பவர், வீட்டிற்கு பின்புறமாக மதுபாட்டில் விற்றது தெரிந்தது.
இதையடுத்து, சுந்தரவடிவேலை கைது செய்து அவரிடமிருந்த 4 மதுபாட்டில்கள், ரூ.400 பணம் ஆகியவற்றை வரஞ்சரம் போலீசார் பறிமுதல் செய்தனர்.