sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 24, 2025 ,ஐப்பசி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

தாட்கோ மூலம் ட்ரோன் தயாரிப்பு பறக்கும் தொழில்நுட்ப பயிற்சி விண்ணப்பங்கள் வரவேற்பு

/

தாட்கோ மூலம் ட்ரோன் தயாரிப்பு பறக்கும் தொழில்நுட்ப பயிற்சி விண்ணப்பங்கள் வரவேற்பு

தாட்கோ மூலம் ட்ரோன் தயாரிப்பு பறக்கும் தொழில்நுட்ப பயிற்சி விண்ணப்பங்கள் வரவேற்பு

தாட்கோ மூலம் ட்ரோன் தயாரிப்பு பறக்கும் தொழில்நுட்ப பயிற்சி விண்ணப்பங்கள் வரவேற்பு


ADDED : ஆக 27, 2025 07:04 AM

Google News

ADDED : ஆக 27, 2025 07:04 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தாட்கோ மூலம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர்களுக்கு, ட்ரோன் தயாரிப்பு மற்றும் பறக்கும் தொழில்நுட்ப பயிற்சி அளிக்கப்படுகிறது.

இதுகுறித்து கலெக்டர் பிரசாந்த் செய்திக்குறிப்பு : ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியனர்களுக்கு தாட்கோ மூலம் ட்ரோன் தயாரிப்பு, கூட்டமைப்பு, சோதனை, பறக்கும் தொழில்நுட்ப பயிற்சி, எம்பெடெட் சென்சார் சோதனை பயிற்சி, பிரிண்டெட் சர்க்யூட் போர்டு வடிவமைப்பு பயிற்சி, பொறியியல் பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்பு பயிற்சி திட்டம் போன்ற பயிற்சிகள் அளிக்கப்படுகிறது.

தாட்கோ மூலம் சென்னையில் உள்ள முன்னணி தொழில்நுட்ப பயிற்சி நிறுவனத்துடன் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு, ட்ரோன் தயாரிப்பு உள்ளிட்ட பொறியியல் பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்பு பயிற்சி திட்டம் உள்ளிட்ட பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளது.

இதற்கான தகுதிகளாக, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தை சார்ந்தவராக இருக்க வேண்டும். ட்ரோன் தயாரிப்பு, கூட்டமைப்பு, சோதனை மற்றும் பறக்கும் தொழில்நுட்ப பயிற்சி, சம்பந்தப்பட்ட பயிற்சிக்கு ஏதெனும் ஒரு பட்டப்படிப்பு முடித்தவரா கவும், 18 முதல் 35 வயது நிரம்பியவராகவும் இருத்தல் வேண்டும். எம்பெடெட் சென்சார் சோதனை பயிற்சி, பிரிண்டெட் சர்க்யூட் போர்டு வடிவமைப்பு பயிற்சி திட்டம், பொறியியல் பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்பு பயிற்சி திட்டம் ஆகிய பயிற்சிகள் வழங்கப்படவுள்ளது.

மேலும், இப்பயிற்சிகளுக்கு 18 முதல் 35 வயது நிரம்பியவராகவும், ஏதேனும் ஒரு இளநிலை பொறியியல் பட்டப்படிப்பு அல்லது ஏதேனும் ஒரு பொறியியல் பட்டயப் படிப்பில் தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும். இப்பயிற்சிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதார்களின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் இருக்க வேண்டும். தகுதியுள்ள இளைஞர்கள் இப்பயிற்சியில் சேருவதற்கு தாட்கோ இணையதளத்தின் மூலம் www.tahdco.com பதிவு செய்து விண்ணப்பிக்கலாம். மேலும் தங்கும் விடுதி மற்றும் உணவு உட்பட செலவினம் தாட்கோ மூலமாக வழங்கப்படும்.

மேலும் விவரங்களுக்கு மாவட்ட மேலாளர் அலுவலகம், தாட்கோ, கலெக்டர் அலுவலகம், கள்ளக்குறிச்சி என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us