/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
சமூக நீதிக்கான விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
/
சமூக நீதிக்கான விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
சமூக நீதிக்கான விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
சமூக நீதிக்கான விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
ADDED : டிச 09, 2025 03:48 AM
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சமூக நீதிக்கான பெரியார் விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
கலெக்டர் பிரசாந்த் செய்திக்குறிப்பு:
சமூக நீதிக்காக பாடுபடுபவர்களை சிறப்பு செய்வதற்காக 'சமூக நீதிக்கான பெரியார் விருது' கடந்த 1995ம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. சமூக நீதிக்கான பெரியார் விருது பெறுவோருக்கு 5 லட்சம் ரூபாய் தொகையும், ஒரு சவரன் தங்கப்பதக்கமும், தகுதியுரையும் வழங்கப்படுகிறது. விருதாளர் தமிழக முதல்வரால் தேர்வு செய்யப்படுவார்.
நடப்பாண்டு 2025ம் ஆண்டிற்கான விருது வழங்குவதற்கு உரிய விருதாளரை தேர்ந்தெடுக்க பரிந்துரைகள் வரவேற்கப்படுகிறது. எனவே. சமூக நீதிக்காக பாடுபட்டு பொதுமக்களின் வாழ்க்கை தரத்தினை மேம்படுத்திட மேற்கொள்ளப்பட்ட பணிகள் மற்றும் அதற்காக செய்த சாதனைகள் ஆகிய தகுதிகள் உடையவர்கள் தங்களது விண்ணப்பத்தினை கலெக்டருக்கு அனுப்பி வைக்கலாம். விண்ணப்பம், சுய விபரம் முழு முகவரி, தொலைபேசி எண் மற்றும் சமூக நீதிக்காக பாடுபட்ட பணிகள் குறித்த விவரம் மற்றும் ஆவணங்கள் உள்ளடக்கியதாக இருத்தல் வேண்டும். 2025ம் ஆண்டிற்கான சமூக நீதிக்கான பெரியார் விருதிற்கான விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் வரும் 18ம் தேதி ஆகும்.

