ADDED : ஏப் 26, 2025 05:32 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சங்கராபுரம் : சங்கராபுரத்தில் தேசிய திறனாய்வு தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா நடந்தது.
சங்கராபுரம் வட்டார கல்வி அலுவலகத்தில் நடந்த விழாவிற்கு, வட்டார கல்வி அலுவலர் அண்ணாதுரை தலைமை தாங்கி திறனாய்வு தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பரிசு வழங்கினார்.
விழாவில் தலைமை ஆசிரியர்கள், பயிற்சி அளித்த ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பங்கேற்றனர்.
தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு மாதம் தோறும் தமிழக அரசு சார்பில் 1,000 ரூபாய் வழங்கப்படும்.