/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
சங்கராபுரம் அரசு ஐ.டி.ஐ.,யில் அப்ரண்டிஸ் சேர்க்கை முகாம்
/
சங்கராபுரம் அரசு ஐ.டி.ஐ.,யில் அப்ரண்டிஸ் சேர்க்கை முகாம்
சங்கராபுரம் அரசு ஐ.டி.ஐ.,யில் அப்ரண்டிஸ் சேர்க்கை முகாம்
சங்கராபுரம் அரசு ஐ.டி.ஐ.,யில் அப்ரண்டிஸ் சேர்க்கை முகாம்
ADDED : ஆக 02, 2025 07:38 AM
கள்ளக்குறிச்சி : சங்கராபுரம் அரசு ஐ.டி.ஐ.,யில் வரும் 11ம் தேதி தொழிற்பழகுநர் பயிற்சிக்கான சேர்க்கை முகாம் நடக்கிறது.
மாவட்ட கலெக்டர் பிரசாந்த் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு;
சங்கராபுரம் அரசு ஐ.டி.ஐ., யில் மாவட்ட அளவிலான தொழிற்பழகுநர் பயிற்சி சேர்க்கை முகாம் வரும் 11ம் தேதி காலை 9:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை நடக்கிறது.
முகாமில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் போன்ற அரசு பொதுத்துறை நிறுவனங்கள், மின் வாரியம், சர்க்கரை உற்பத்தி நிறுவனங்கள், சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் முன்னனி நிறுவனங்கள் கலந்து கொண்டு தொழிற்பழகுநர் பயிற்சிக்கு 1000க்கும் மேற்பட்டோரை தேர்வு செய்ய உள்ளனர்.
என்.சி.வி.டி., மற்றும் நேரடியாக தொழிற்சாலைகளில் பிரஸ்ஸர் அப்ரண்டிஸ்ஸாக சேர்ந்து 3 முதல் 6 மாத கால அடிப்படை பயிற்சி, ஒரு ஆண்டு முதல் 2 ஆண்டுகள் வரை அப்ரண்டிஸ் பயிற்சி பெற்று, தேசிய தொழிற்பழகுநர் சான்றிதழ் பெறலாம். பயிற்சிக்கான மாதாந்திர உதவித் தொகை ரூ.8,500 முதல் ரூ.12,000 வரை வழங்கப்படும்.
மேலும் விவரங்களுக்கு, விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்ட திறன் பயிற்சி உதவி இயக்குனர் அலுவலக எண் 04146 - 294989 என்ற எண்ணிலும், விழுப்புரம் மண்டல பயிற்சி இணை இயக்குனர் 04146 - 290673 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.
இவ்வாறு அதில் உள்ளது.