/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
அருணாச்சலேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்
/
அருணாச்சலேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்
ADDED : நவ 15, 2024 04:53 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் அடுத்த விளந்தை அபிதகுஜாம்பாள் சமேத அருணாச்சலேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
திருக்கோவிலூர் அடுத்த விளந்தையில் அமைந்துள்ள பழமையான அபிதகுஜாம்பாள் சமேத அருணாச்சலேஸ்வரர் கோவில் புனரமைக்கப்பட்டு, மருந்து சாற்றி, நேற்று கும்பாபிஷேகம் நடந்தது.
அதிகாலை 4:00 மணிக்கு நான்காவது கால வேள்வி பூஜை, பிரதான கலச பூஜை, 5:45 மணிக்கு மகா பூர்ணாகுதி, கடம் புறப்பாடாகி 8:00 மணிக்கு மூலவர் சுவாமி, அம்பாள் மற்றும் பரிவார மூர்த்திகளின் மூலஸ்தான கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடந்தது.
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.