/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்ற தடுப்பு குறித்த விழிப்புணர்வு
/
பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்ற தடுப்பு குறித்த விழிப்புணர்வு
பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்ற தடுப்பு குறித்த விழிப்புணர்வு
பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்ற தடுப்பு குறித்த விழிப்புணர்வு
ADDED : பிப் 12, 2025 11:49 PM

கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சியில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற தடுப்புகள் குறித்து காவல் துறை சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
கள்ளக்குறிச்சி மாவட்ட பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற தடுப்பு பிரிவு, சைபர் கிரைம் மற்றும் சமூக நீதி மற்றும் மனித உரிமை பிரிவு போலீஸ் சார்பில் நாட்டுப்புற கலைக்குழுவினர் மூலம் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
எஸ்.பி.,ரஜத்சதுர்வேதி உத்தரவின் பேரில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற தடுப்பு பிரிவு ஏ.டி.எஸ்.பி., ரமேஷ், பெண்களுக்கு எதிரான குற்ற புலனாய்வு டி.எஸ்.பி.,ஜெயக்குமார் மேற்பார்வையில் நடந்தது.
பஸ் நிலையத்தில் கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் விஷ்ணுபிரியா, சைபர் கிரைம் சப் இன்ஸ்பெக்டர் அப்புதுரை, பெண்களுக்கு எதிரான குற்ற புலனாய்வு பிரிவு சப் இன்ஸ்பெக்டர் ரவி மற்றும் போலீசார் பலர் பங்கேற்று பள்ளி மாணவிகள் மற்றும் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இதில் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள், வன்கொடுமைகள், குழந்தை திருமணம், விழிப்புணர்வு, பிரச்னை ஏற்பட்டால் இலவச அவசர எண்களில் போலீசுக்கு தகவல் தெரிவிப்பது குறித்த விழிப்புணர்வு மேற்கொள்ளப்பட்டது.
மேலும், பெண்களுக்கு எதிரான சைபர் குற்றங்கள் மற்றும் விழிப்புணர்வு, சைபர் புகார் உதவி எண்.1930 குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. தொடர்ந்து, விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்களிடையே வழங்கப்பட்டது. பின்னர், கள்ளக்குறிச்சி நான்கு முனை சந்திப்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.