கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பொது இடங்களில் உள்ள விளம்பர பேனர்களை கண்காணித்து அகற்றுமாறு போலீசாருக்கு எஸ்.பி., உத்தரவிட்டார்.
வங்கக் கடலில் உருவான பெஞ்சல் புயல், மாமல்லபுரம் - காரைக்கால் இடையே கரையை கடக்கும் போது கன மழையும், பலத்த காற்றும் வீசும் என வானிலை மையம் அறிவித்தது. இதனால், கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு 'ரெட் அலர்ட்' எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதனால், பொதுமக்கள் வீடுகளில் பத்திரமாக இருக்குமாறும், அத்தியாவசிய பணி இருந்தால் மட்டும் வெளியே வருமாறும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
பலத்த காற்று வீசும் என்பதால் பொதுமக்கள் கூடும் முக்கிய பகுதிகள் மற்றும் சாலையோரத்தில் வைக்கப்பட்டுள்ள விளம்பர பேனர்கள் அகற்றும்படி எஸ்.பி., ரஜத்சதுர்வேதி போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளார்.
இதையொட்டி, சட்டம், ஒழுங்கு போலீசார் தங்களது பகுதியில் உள்ள பேனர்களை கண்காணித்து, அதன் பொறுப்பாளர்களை தொடர்பு கொண்டு அகற்றக்கோரி அறிவுறுத்தினர்.

