sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

பாதாள சாக்கடை பைப் லைனில் அடைப்பு; கழிவுநீர் வெளியேறி சுகாதார சீர்கேடு

/

பாதாள சாக்கடை பைப் லைனில் அடைப்பு; கழிவுநீர் வெளியேறி சுகாதார சீர்கேடு

பாதாள சாக்கடை பைப் லைனில் அடைப்பு; கழிவுநீர் வெளியேறி சுகாதார சீர்கேடு

பாதாள சாக்கடை பைப் லைனில் அடைப்பு; கழிவுநீர் வெளியேறி சுகாதார சீர்கேடு


ADDED : பிப் 08, 2025 06:21 AM

Google News

ADDED : பிப் 08, 2025 06:21 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உளுந்துார்பேட்டை; உளுந்துார்பேட்டையில் பாதாள சாக்கடை திட்டப் பணியில், பைப் லைனில் அடைப்பு ஏற்பட்டுள்ளதால், கழிவுநீர் வெளியேறி பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில், உளுந்துார்பேட்டையில் பாதாள சாக்கடை திட்டத்திற்கு, 38.67 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த திட்டத்தில், 3.5 கி.மீ., துாரத்திற்கு பைப் லைன் அமைக்கப்பட்டது.

இதில் தெரு பகுதிகளில் இருந்து கழிவு நீரானது, 6 நீரேற்று நிலையங்கள் மற்றும், 2 நீர் உந்து நிலையங்கள் மூலம் எடுத்துச் செல்லப்பட்டு, சேலம் சாலையில் உள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் சுத்திகரிக்கப்படுகிறது.

அதன் பிறகு மாசு நீக்கப்பட்ட அந்த நீரானது கீரனுார் ஏரியில் விடப்படுகிறது. கழிவுநீரை வெளியேற்ற, 2000க்கும் மேற்பட்ட வீடுகளில் இருந்து பைப் லைன் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

இதில் தற்போது அடைப்பு ஏற்பட்டுள்ளதால், உளுந்துார்பேட்டையின் பல பகுதிகளில் கழிவுநீர் வெளியேறி துர்நாற்றம் வீசி வருகிறது.

பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டால் அதனை சரி செய்வதற்கு உரிய இயந்திரங்களோ, வாகனங்களோ தற்போது வரை நகராட்சி நிர்வாகம் வாங்காமல் உள்ளது.

அதனால் இதற்கான உபகரணங்களை வாடகைக்கு எடுத்து கழிவு நீர் அடைப்புகளை அகற்ற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இந்த கழிவுநீரால் துர்நாற்றமும், தொற்றுநோய் பரவும் அபாயமும் அதிகரித்து வருகிறது.

அதனால் இந்த பிரச்னைக்கு நகராட்சி நிர்வாகம் உடனடியாக நிரந்தர தீர்வு காண வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us