sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

பிரம்மோற்சவ விழா துவக்கம்

/

பிரம்மோற்சவ விழா துவக்கம்

பிரம்மோற்சவ விழா துவக்கம்

பிரம்மோற்சவ விழா துவக்கம்


ADDED : ஏப் 05, 2025 04:47 AM

Google News

ADDED : ஏப் 05, 2025 04:47 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் உலகளந்த பெருமாள் கோவிலில், பிரம்மோற்சவ விழா துவங்கியது.

திருக்கோவிலுாரில் உலகளந்த பெருமாள் கோவிலுக்கு, நாள்தோறும் ஏராளமானோர் வந்து செல்கின்றனர். 108 திவ்ய தேசங்களில் ஒன்றான, இந்த கோவிலின் பிரம்மோற்சவ விழா நேற்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது.

அதிகாலை,5:00 மணிக்கு மூலவர் விஸ்வரூப தரிசனம், உற்சவ மூர்த்தியான ஸ்ரீதேவி பூதேவி சமேத தேகளீச பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் கொடி மரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

ஜீயர் தேகளீச ராமானுஜ ஆச்சாரியார் தலைமையில், பட்டாச்சாரியார்கள் வேத மந்திரம் முழங்க 6:30 மணிக்கு கொடியேற்றப்பட்டு விழா துவங்கியது. மாலை 5:00 மணிக்கு வசந்த மண்டபத்தில் சுவாமி ஊஞ்சல் சேவை நடந்தது. இரவு 8:00 மணிக்கு அம்ச வாகனத்தில் வீதி உலா நடந்தது. நாள்தோறும் பல்வேறு வாகனங்களில், சுவாமி வீதி உலா நடக்கிறது.

வரும், 12ம் தேதி காலை 7:30 மணிக்கு தேரோட்டம் நடக்க உள்ளது. தேவஸ்தான பவர் ஏஜெண்ட் கிருஷ்ணன் மற்றும் பக்தர்கள் ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us