/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
மத்திய காலணி பயிற்சி நிறுவனத்தில் தொழிற்கல்வி சேர்க்கைக்கு அழைப்பு
/
மத்திய காலணி பயிற்சி நிறுவனத்தில் தொழிற்கல்வி சேர்க்கைக்கு அழைப்பு
மத்திய காலணி பயிற்சி நிறுவனத்தில் தொழிற்கல்வி சேர்க்கைக்கு அழைப்பு
மத்திய காலணி பயிற்சி நிறுவனத்தில் தொழிற்கல்வி சேர்க்கைக்கு அழைப்பு
ADDED : ஜூலை 28, 2025 02:11 AM
கள்ளக்குறிச்சி: சென்னை கிண்டி மத்திய காலணி பயிற்சி நிறுவனத்தில் தொழிற்கல்வி சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கள்ளக்குறிச்சி கலெக்டர் பிரசாந்த் செய்திக்குறிப்பு;
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்துார்பேட்டை சிப்காட் தொழிற்பூங்காவில், 2302 கோடி ரூபாய் முதலீட்டில் 20 ஆயிரம் நபர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையில் பவுசென் என்கிற காலணி உற்பத்தி ஆலை கட்டப்பட்டு வருகின்றது. இத்தொழிற்சாலையில் கள்ளக்குறிச்சி மாவட்ட இளைஞர்கள் பணியில் சேர காலணி தயாரிப்பு தொடர்பான பாடப்பிரிவு படித்திருக்க வேண்டும்.
பணியில் சேர விருப்பம் உள்ளவர்கள் மத்திய அரசின் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனத்தின் கட்டுப்பாட்டின் கீழ் சென்னை கிண்டி மத்திய காலணி பயிற்சி நிறுவனத்தில் பயிற்சி முடிக்க வேண்டும்.
இதில் சேர விருப்பம் உள்ள இளைஞர்கள் அதற்கான சேர்க்கை விண்ணப்பத்தை கலெக்டர் அலுவலகத்தில் பெறலாம்.
காலணி உற்பத்தி மற்றும் வடிவமைப்பு டிப்ளமோ, காலணி வடிவமைப்பு மற்றும் தயாரிப்பு வளர்ச்சியில் மேம்பட்ட சான்றிதழ் படிப்பு, காலணி உற்பத்தி தொழில்நுட்பத்தில் மேம்பட்ட சான்றிதழ் படிப்பு, காலணி வடிவமைப்பு மற்றும் உற்பத்தி பயிற்சி, காலணி தொழில்நுட் முதுகலை டிப்பளமோ பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் 35 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
அனைத்து பாடப்பிரிவுகளுமே ஆங்கில வழி கற்றல் முறை. மாணவ, மாணவியர்களுக்கு தனி தனி விடுதி வசதி உள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 10 மற்றும் பிளஸ் 2, பட்டப்படிப்பு மற்றும் டிப்ளமோ தேர்ச்சி பெற்றவர்கள், சேர்க்கைக்கான விண்ணப்பங்களை வரும் ஜூலை 31ம் மற்றும் ஆகஸ்ட் 1ம் தேதி ஆகிய இரு நாட்கள் கலெக்டர் அலுவலகத்தில் பெறலாம்.
பூர்த்தி செய்த விண்ணப்பங்களை ஆகஸ்ட் 1ம் தேதியே வழங்க வேண்டும்.
மேலும் விபரங்களுக்கு சேர்க்கை ஒருங்கிணைப்பாளர்கள் மணிகண்டன் 9677943633 மற்றும் பாலசுப்ரமணியன் 9677943733 ஆகியோரின் மொபைல் எண்களில் தொடர்பு கொண்டு சந்தேகத்தை தீர்த்து கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.