sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

போலீசை தாக்கிய 3 பேர் மீது வழக்கு

/

போலீசை தாக்கிய 3 பேர் மீது வழக்கு

போலீசை தாக்கிய 3 பேர் மீது வழக்கு

போலீசை தாக்கிய 3 பேர் மீது வழக்கு


ADDED : நவ 03, 2024 04:07 AM

Google News

ADDED : நவ 03, 2024 04:07 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ரிஷிவந்தியம், :பகண்டைகூட்ரோடு அருகே போதை ஆசாமி குவாட்டர் பாட்டிலால் போலீசாரை தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

வாணாபுரம் அடுத்த நாகல்குடி டாஸ்மாக் கடை அருகே நேற்று முன்தினம் இரவு 11:45 மணியளவில் குடி போதையில் சிலர் தகராறு செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், பகண்டைகூட்ரோடு தலைமைக் காவலர் சங்கரநாராயணன், இரண்டாம் நிலை காவலர் மதன்குமார் ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்றனர்.

அங்கு தகராறு செய்து கொண்டிருந்த பெரியபகண்டை பெரியசாமி மகன் சிவா, 24; கோவிந்தசாமி மகன் சந்தோஷ்குமார், 25; அன்பழகன் மகன் பிரசாந்த், 24; ஆகிய 3 பேரையும் கலைந்து செல்லுமாறு அறிவுறுத்தினர்.

அப்போது, சிவா குவாட்டர் பாட்டிலால் தாக்கியதில் சங்கரநாராயணனுக்கு தலையில் காயம் ஏற்பட்டது. உடன், வாணாபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்றார்.

பணியில் இருந்த போலீசாரை தாக்கியது தொடர்பாக சிவா, சந்தோஷ்குமார், பிரசாந்த் ஆகிய 3 பேர் மீதும் பகண்டைகூட்ரோடு போலீசார் வழக்குப்பதிந்து, சிவாவை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us