sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 26, 2025 ,மார்கழி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

போக்குவரத்து விதிமுறை மீறல் 90 வாகன ஓட்டிகள் மீது வழக்கு

/

போக்குவரத்து விதிமுறை மீறல் 90 வாகன ஓட்டிகள் மீது வழக்கு

போக்குவரத்து விதிமுறை மீறல் 90 வாகன ஓட்டிகள் மீது வழக்கு

போக்குவரத்து விதிமுறை மீறல் 90 வாகன ஓட்டிகள் மீது வழக்கு


ADDED : ஜன 02, 2024 05:46 AM

Google News

ADDED : ஜன 02, 2024 05:46 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி உட்கோட்டத்தில் நேற்று முன்தினம் போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்றாத 90 வாகன ஓட்டிகள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

கள்ளக்குறிச்சி காவல் உட்கோட்ட பகுதியில் நடைபெறும் வாகன விபத்து, திருட்டு உள்ளிட்ட குற்ற சம்பவங்களை தடுக்கும் பொருட்டு போலீசார் தினமும் ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர்.

புத்தாண்டையொட்டி, உட்கோட்டத்திற்குட்பட்ட அனைத்து பகுதிகளிலும் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று காலை வரை போலீசார் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அதில், உரிய ஆவணங்கள் இல்லாமல் வாகனம் ஓட்டியது தொடர்பாக 22 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.

அதேபோல், பதிவெண் சரியாக இல்லாதது தொடர்பாக 21 பேர், சைலன்சரை மாற்றியதாக 8 பேர், அதிவேகமாக வாகனம் ஓட்டியதாக 33 பேர், மதுபோதையில் வாகனம் ஓட்டிய 6 பேர் என 90 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர். அதில், 17 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.






      Dinamalar
      Follow us