/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
தொழிலாளியை தாக்கிய 2 பேர் மீது வழக்கு
/
தொழிலாளியை தாக்கிய 2 பேர் மீது வழக்கு
ADDED : பிப் 14, 2024 03:03 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ரிஷிவந்தியம் : ரிஷிவந்தியம் அடுத்த பிரிவிடையாம்பட்டை சேர்ந்தவர் முருகன்,40; பெங்களூரில் கூலி வேலை செய்கிறார். இவருக்கும், இவரது தம்பி மனைவி தனலட்சுமியின் குடும்பத்திற்கும் இடம் தொடர்பாக பிரச்னை உள்ளது.
கடந்த 7ம் தேதி தனலட்சுமியின் தம்பி பட்டுராஜா மகன் வெள்ளையதேவன் மற்றும் கருணாநிதி ஆகியோர் முருகனை திட்டி தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தனர்.
புகாரின் பேரில் வெள்ளையதேவன், கருணாநிதி ஆகியோர் மீது ரிஷிவந்தியம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

