/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
வரதட்சனை கேட்டு கொடுமை: 5 பேர் மீது வழக்கு
/
வரதட்சனை கேட்டு கொடுமை: 5 பேர் மீது வழக்கு
ADDED : நவ 14, 2025 11:19 PM
கள்ளக்குறிச்சி: கச்சிராயபாளையம் அருகே காதல் திருமணம் செய்து கொண்ட 2 மாதத்தில் வரதட்சனை கேட்டு மனைவியை கொடுமைபடுத்திய கணவன் உள்ளிட்ட 5 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
கச்சிராயபாளையம் அடுத்த மாத்துார் கிராமத்தை சேர்ந்த மாரியப்பிள்ளை மகன் சிலம்பரசன், 24; இவரது மனைவி ஆனந்தி,19; இருவரும் காதலித்து கடந்த ஜூலை 16 ம் தேதி திருமணம் செய்து கொண்டனர்.
திருமணமான 2 மாதத்தில் கணவர் சிலம்பரசன் மற்றும் அவரது குடும்பத்தினர் மாரியப்பிள்ளை, ரேணுகாதேவி, சுகுணாதேவி, கங்காதுரை ஆகியோர் சேர்ந்து வரதட்சனை கேட்டு ஆனந்தியை கொடுமைப்படுத்தியுள்ளனர்.
இது குறித்து ஆனந்தி கொடுத்த புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் போலீசார் சிலம்பரசன் உள்ளிட்ட 5 பேர் மீது வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

