ADDED : ஏப் 01, 2025 04:44 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி: வரஞ்சரம் அருகே சூதாடிய 5 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.
வரஞ்சரம் சப் இன்ஸ்பெக்டர் பிரபு மற்றும் போலீசார் நேற்று முன்தினம் மாலை ரோந்துப் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, பணம் வைத்து சூதாடிய புதுஉச்சிமேடு கிராமத்தைச் சேர்ந்த அய்யப்பன், சிவபிரகாசம், நடராஜன், சிவக்குமார், செல்வராஜ் ஆகிய 5 பேரும் தப்பியோடினர்.
உடன், அங்குகிடந்த 250 ரூபாய் மற்றும் புள்ளி தாள்களை பறிமுதல் செய்து, 5 பேர் மீதும் வழக்குப் பதிந்து தேடி வருகின்னர்.