/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
முன்விரோத தகராறு 5 பேர் மீது வழக்கு
/
முன்விரோத தகராறு 5 பேர் மீது வழக்கு
ADDED : டிச 23, 2025 07:19 AM
திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் அருகே முன்விரோத தகராறில் 5 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.
திருக்கோவிலுார் அடுத்த அரும்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் பவன்குமார் மனைவி சரண்யா, 28; அதே பகுதியைச் சேர்ந்தவர் கணேசன் மகன் ரஞ்சித் குமார், 32; இவர்கள் இருவருக்குமிடையே நிலம் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
கடந்த 19ம் தேதி சரண்யாவின் வீட்டிற்குச் சென்ற ரஞ்சித் குமார், வழக்கை வாபஸ் வாங்கக் கோரி திட்டி கொலை மிரட்டல் விடுத்தார். இதனால் இரு தரப்பினரும் தாக்கிக் கொண்டனர்.
இதுகுறித்து இரு தரப்பு புகாரின் பேரில், பவுன்குமார், 31; ரஞ்சித் குமார் உட்பட 5 பேர் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

