sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

மாஜி ஊராட்சி தலைவர் தற்கொலை இன்ஸ்., உட்பட 7 பேர் மீது வழக்கு

/

மாஜி ஊராட்சி தலைவர் தற்கொலை இன்ஸ்., உட்பட 7 பேர் மீது வழக்கு

மாஜி ஊராட்சி தலைவர் தற்கொலை இன்ஸ்., உட்பட 7 பேர் மீது வழக்கு

மாஜி ஊராட்சி தலைவர் தற்கொலை இன்ஸ்., உட்பட 7 பேர் மீது வழக்கு


ADDED : ஆக 05, 2025 02:29 AM

Google News

ADDED : ஆக 05, 2025 02:29 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உளுந்துார்பேட்டை: உளுந்துார்பேட்டை அருகே முன்னாள் ஊராட்சி தலைவரை தற்கொலைக்கு துாண்டியதாக, இன்ஸ்பெக்டர் உட்பட 7 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

உளுந்துார்பேட்டை அடுத்த அத்திப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் நயினா, 65; முன்னாள் ஊராட்சி தலைவர். இவரது தம்பி பன்னீர்செல்வம் 4 ஆண்டுகளுக்கு முன்பு இறந்தார். குடும்ப சொத்தான 37 ஏக்கர் நிலத்தை நயினா விவசாயம் செய்து வந்தார்.

இந்நிலையில், பன்னீர்செல்வத்தின் மனைவி சரிதா, 45; தனது கணவருக்கு சேர வேண்டிய பாகத்தை பிரித்து தரும்படி நயினாவிடம் கேட்டுள்ளார். இதனால் பிரச்னை ஏற்பட்டுள்ளது. திருநாவலுார் போலீசில் சரிதா புகார் செய்தார்.

போலீசார் இருதரப்பினரையும் அழைத்து பேசி, இருவரும் சமமாக நிலத்தை பிரித்துக் கொள்ளுமாறு கூறி அனுப்பி வைத்தனர்.

அதையடுத்து, க டந்த இரு நாட்களுக்கு முன்பு, கணவரின் அண்ணன் நயினா தன்னை திட்டி தாக்கி மனபங்கப்படுத்தியதாக போலீசில் சரிதா புகார் அளித்தார். இது தொடர்பாக திருநாவலுார் இன்ஸ்பெக்டர் இளையராஜா, கடந்த 2ம் தேதி, பன்னீர்செல்வத்தை போலீஸ் நிலையம் வரவழைத்து விசாரணை நடத்தினார். பின்னர், நயினா வீடு திரும்பினார்.

நேற்று காலை விவசாய நிலத்திற்கு செல்வதாக கூறிவிட்டு சென்ற நயினா, காலை 8:30 மணிக்கு, வி வசாய நிலத்தில் உள்ள கொட்டகையில் துாக்கில் தொங்கினார். தகவலின்பேரில் திருநாவலுார் போலீசார் நயினா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக உளுந்துார்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும், கள்ளக்குறிச்சி எஸ்.பி., மாதவன் மற்றும் உளுந்துார்பேட்டை டி.எஸ்.பி., அசோகன் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினர்.

இந்நிலையில் தனது கணவரை போலீஸ் நிலையம் அழைத்து மிரட்டிதயால் வேதனையில் அவர் தற்கொலை செய்து கொண்டாகவும், தற்கொலைக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி, நயினா மனைவி பழனியம்மாள், 62; கொடுத்த புகாரின் பேரில், திருநாவலுார் இன்ஸ்பெக்டர் இளையராஜா, சரிதா, பழனிவேல், சுந்தரம், ஆறுமுகம், சந்திரசேகர், கண்ணன் ஆகிய 7 பேர் மீது தற்கொலைக்கு துாண்டுதல் பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து, டி.எஸ்.பி. அசோகன் விசாரித்து வருகிறார்.

போலீஸ் மிரட்டலால் மாஜி ஊராட்சி தலைவர் தற்கொலைக்கு செய்து கொண்ட சம்பவம், உளுந்துார்பட்டையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடிதம் சிக்கியது தற்கொலை செய்து கொண்ட நயினா சட்டை பாக்கெட்டில் இருந்து கடிதம் ஒன்று சிக்கியது. அதில்,'தனது தற்கொலைக்கு சரிதா, அவரது கூட்டாளிகள் மற்றும் பொய் வழக்கு போடுவேன் என மிரட்டிய திருநாவலுார் இன்ஸ்பெக்டர் தான் காரணம்' என எழுதப்பட்டு இருந்தது. இதைத் தொடர்ந்து, இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட 7 பேர் மீது தற்கொலைக்கு துாண்டுதல் வழக்கு பதிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.








      Dinamalar
      Follow us