/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
பணம் கேட்ட தகராறு; ஒருவர் மீது வழக்கு
/
பணம் கேட்ட தகராறு; ஒருவர் மீது வழக்கு
ADDED : நவ 24, 2024 11:22 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ரிஷிவந்தியம் ; ரிஷிவந்தியம் அருகே கொடுத்த கடனை திருப்பிக் கேட்டவரை தாக்கியவர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.
ரிஷிவந்தியம் அடுத்த மேலத்தேனுாரைச் சேர்ந்தவர் மாரிமுத்து, 70; இவர் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் சேரந்தாங்கலைச் சேர்ந்த ரங்கநாதன் என்பவருக்கு 50 ஆயிரம் ரூபாய் கடனாக கொடுத்துள்ளார்.
கடந்த 23ம் தேதி மாரிமுத்து சேரந்தாங்கலுக்கு சென்று கடனாக கொடுத்த பணத்தை தருமாறு கேட்டுள்ளார். அப்போது, ரங்கநாதன் பணமே வாங்கவில்லை என கூறி, மாரிமுத்துவை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தார்.
புகாரின் பேரில், ரிஷிவந்தியம் போலீசார் ரங்கநாதன் மீது வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.