sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 31, 2025 ,ஐப்பசி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

டிபன் சாப்பிட வந்தவரை தாக்கிய இருவர் மீது வழக்கு

/

டிபன் சாப்பிட வந்தவரை தாக்கிய இருவர் மீது வழக்கு

டிபன் சாப்பிட வந்தவரை தாக்கிய இருவர் மீது வழக்கு

டிபன் சாப்பிட வந்தவரை தாக்கிய இருவர் மீது வழக்கு


ADDED : ஜூலை 28, 2025 02:16 AM

Google News

ADDED : ஜூலை 28, 2025 02:16 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் அருகே டிபன் சாப்பிட வந்தவரை தாக்கிய இருவர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

திருக்கோவிலுார் அடுத்த ராஜம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் சண்முகம் மகன் கோவிந்தராஜன், 22; தனது நண்பர்களான பாலமுருகன், துரை ஆகியோர்களுடன் அரகண்டநல்லுாரில் சிமெண்ட் லோடு ஏற்ற கடந்த 24ம் தேதி சென்றார். டி.கே. மண்டபத்தில் உள்ள மோகன் டிபன் கடையில் டிபன் சாப்பிட்டனர்.

தோசை விலை விசாரித்தபோது, ஒரு தோசை 10 ரூபாய் எனக்கு கூறியதாக தெரிகிறது. டிபன் சாப்பிட்டு முடித்தவுடன், ஒரு தோசை 15 ரூபாய் கூறியதால், ஏன் இப்படி மாற்றி பேசுகிறீர்கள் என கோவிந்தராஜன் கேட்டார்.

இதனால் ஆத்திரமடைந்த டிபன் கடை உரிமையாளர் மோகன் மகன் குமரேசன், 28; அவரது நண்பர் சம்பத், 36; ஆகியோர் கோவிந்தராஜனை சரமாரியாக தாக்கினார்.

இது குறித்து கோவிந்தராஜன் அளித்த புகாரின் பேரில் சம்பத் மற்றும் குமரேசன் மீது திருக்கோவிலுார் போலீசார் வழக்கு பதிந்து தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us