sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 01, 2025 ,புரட்டாசி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

எஸ்.பி., அலுவலகத்திற்கு டீசலுடன் வந்த 3 பெண்கள் மீது வழக்குப் பதிவு

/

எஸ்.பி., அலுவலகத்திற்கு டீசலுடன் வந்த 3 பெண்கள் மீது வழக்குப் பதிவு

எஸ்.பி., அலுவலகத்திற்கு டீசலுடன் வந்த 3 பெண்கள் மீது வழக்குப் பதிவு

எஸ்.பி., அலுவலகத்திற்கு டீசலுடன் வந்த 3 பெண்கள் மீது வழக்குப் பதிவு


ADDED : செப் 21, 2025 11:11 PM

Google News

ADDED : செப் 21, 2025 11:11 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி எஸ்.பி., அலுவலகத்திற்கு டீசலுடன் வந்த 3 பெண்கள் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

சங்கராபுரம் அடுத்த செம்பராம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் குப்பன் மனைவி அசோதை, 65; ஆந்திரா மாநிலம், இந்துப்பூர் பகுதியைச் சேர்ந்தவர் சுப்ரமணி மனைவி பச்சையம்மாள், 62; வாணாபுரம் அடுத்த புதுப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் பச்சைமுத்து மனைவி லட்சுமி, 60; ஆகிய 3 பேரும் நேற்று முன்தினம் கள்ளக்குறிச்சி எஸ்.பி., அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்தனர்.

அங்கு பணியில் இருந்த போலீசார் 3 பேரிடமும் விசாரணை செய்து, அவர்கள் வைத்திருந்த பையை சோதனை செய்தனர்.

அதில், 2 லிட்டர் டீசலும், தீப்பெட்டியும் இருந்தது தெரிந்தது. உடன் போலீசார் டீசலை பறிமுதல் செய்து, 3 பேரையும் கள்ளக்குறிச்சி காவல் நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர்.

கள்ளக்குறிச்சி போலீசார் 3 பேர் மீதும் வழக்குப் பதிந்து டீசலுடன் எதற்கு வந்தனர் என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us