/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
அரசு மருத்துவமனை கண்ணாடியை உடைத்த வாலிபர் மீது வழக்கு பதிவு
/
அரசு மருத்துவமனை கண்ணாடியை உடைத்த வாலிபர் மீது வழக்கு பதிவு
அரசு மருத்துவமனை கண்ணாடியை உடைத்த வாலிபர் மீது வழக்கு பதிவு
அரசு மருத்துவமனை கண்ணாடியை உடைத்த வாலிபர் மீது வழக்கு பதிவு
ADDED : செப் 05, 2025 07:45 AM
கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சி அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனை கண்ணாடியை உடைத்து சேதப்படுத்திய வாலிபர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
சின்னசேலம் அடுத்த காட்டனந்தல் காட்டுகொட்டாய் சேர்ந்த சேகர் மகன் சக்திபிரியன்,38; கர்ப்பிணியான இவரது மனைவி ராஜராஜேஸ்வரியை பிரசவத்திற்காக கள்ளக்குறிச்சி கச்சிராயபாளையம் சாலையில் உள்ள அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனை மகப்பேறு பிரிவில் சேர்த்துள்ளார். கடந்த 1 ம் தேதி இரவு 7.30 மணிக்கு சக்திபிரியனுக்கும், அவரது மனைவி ராஜராஜேஸ்வரிக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டுள்ளது.
இதில் ஆத்திரமடைந்த சக்திபிரியன் மருத்துவமனையின் கண்ணாடியை உடைத்து சேதப்படுத்தியுள்ளார். இதனால் மருத்துவமனையில் உள்ள மற்ற கர்ப்பிணி பெண்கள் கடும் அச்சமடைந்துள்ளனர். இது தொடர்பாக அரசு மருத்துவ கல்லுாரி டீன் பவானி கொடுத்த புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் சக்திபிரியன் மீது வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.