sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 24, 2025 ,கார்த்திகை 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

 மத்திய அரசின் 'குரு சிஷ்யா பரம்பரா' பயிற்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ்

/

 மத்திய அரசின் 'குரு சிஷ்யா பரம்பரா' பயிற்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ்

 மத்திய அரசின் 'குரு சிஷ்யா பரம்பரா' பயிற்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ்

 மத்திய அரசின் 'குரு சிஷ்யா பரம்பரா' பயிற்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ்


ADDED : நவ 24, 2025 07:06 AM

Google News

ADDED : நவ 24, 2025 07:06 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் மத்திய அரசின் குரு சிஷ்யா பரம்பரா இரண்டு மாத பயிற்சி முகாமில் பங்கேற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா நடந்தது.

கள்ளக்குறிச்சி விருக்க்ஷா கைவினை தொழில் கூட்டமைப்பு கட்டடத்தில் மத்திய அரசின் ஜவுளி அமைச்சக நிதி உதவியுடன் சென்னை பூம்புகார் தமிழ்நாடு கைத்திற தொழில் வளர்ச்சி கழகம் சார்பில் குரு சிஷ்யா பரம்பரா இரண்டு மாத மர சிற்ப பயிற்சி நடந்தது.

இப்பயிற்சியில் 12 ஆண்கள், 18 பெண்கள் என 30 பேர் பயிற்சி பெற்றனர். இவர்களின் பயிற்சிக்காலம் நிறைவடைந்த நிலையில் இவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் விழா நடந்தது.

புதுச்சேரி கைவினை அபிவிருத்தி ஆணைய உதவி இயக்குனர் ரூப்சந்தர் தலைமை தாங்கி மர சிற்ப பயிற்சி நிறைவு செய்தவர்களுக்கு சான்றிதழ் வழங்கினார்.

சேலம் பூம்புகார் விற்பனை நிலைய மேலாளர் நரேந்திர போஸ், கள்ளக்குறிச்சி பூம்புகார் உற்பத்தி நிலைய மேலாளர் வேலாயுதம் முன்னிலை வகித்தனர்.

மரசிற்ப பயிற்றுநர் சக்திவேல் நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us