/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
வாராஹி அம்மனுக்கு சந்தனகாப்பு அலங்காரம்
/
வாராஹி அம்மனுக்கு சந்தனகாப்பு அலங்காரம்
ADDED : ஜன 31, 2024 02:19 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சின்னசேலம் : சின்னசேலத்தில் பஞ்சமி திதியை முன்னிட்டு வாராஹி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது.
சின்னசேலம் சிவன் கோவிலில் உள்ள வாராஹி அம்மனுக்கு பஞ்சமி திதியை முன்னிட்டு நேற்று சிறப்பு அபிேஷகம் நடந்தது. பால், இளநீர், தயிர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 17 வகையான திரவியங்களை கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து, வாராஹி அம்மனுக்கு சந்தனகாப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாரதணை காண்பிக்கப்பட்டது.
பூஜைகளை குருக்கள் ஸ்ரீகாந்த் செய்து வைத்தார். திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.