sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 30, 2025 ,ஐப்பசி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

இரு தரப்பு மோதல்: 9 பேர் கைது

/

இரு தரப்பு மோதல்: 9 பேர் கைது

இரு தரப்பு மோதல்: 9 பேர் கைது

இரு தரப்பு மோதல்: 9 பேர் கைது


ADDED : ஜன 19, 2024 07:30 AM

Google News

ADDED : ஜன 19, 2024 07:30 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருக்கோவிலுார் : திருக்கோவிலுார் அருகே இருதரப்பினர் மோதல் தொடர்பாக 26 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்து 9 பேரை கைது செய்தனர்.

வடமருதுார் கிராமத்தைச் சேர்ந்தவர் ரமேஷ் மகன் கார்த்திக், 20; மற்றும் அவரது நண்பர்கள் ஏரிக்கரை அருகே நின்று பேசிக் கொண்டிருந்தனர்.

அப்போது அந்த வழியாக பைக்கில் வந்த காட்டுகாலனியைச் சேர்ந்த ஜெயபால் மகன் குமார், 23; கார்த்திக் மீது மோதுவது போல் வந்ததால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

இதில் ஆத்திரமடைந்த குமார் அவரது ஆதரவாளர்கள் கஜேந்திரன் மகன் ராகுல், 23; ஏழுமலை மகன் நரசிம்மன், 22; உட்பட 6 பேர் கார்த்திகை தாக்கினார்.

இது பற்றி தகவல் அறிந்த வடமருதுாரைச் சேர்ந்த குபேந்திரன் மகன் சுகன், குணசேகர் மகன் பன்னீர்செல்வம், குணா மகன்கள் விக்னேஷ், கவியரசன் உட்பட 20 பேர் காட்டு காலனிக்குள் நுழைந்து அங்கிருந்தித வீடுகளுக்குள் புகுந்து பலரையும் சரமாரியாக தாக்கினர்.

இது குறித்து இரு இருப்பினரும் கொடுத்த புகாரின் பேரில், 26 பேர் மீது வழக்குப்பதிந்து, 9 பேரை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us