/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
நெசவாளர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த கதர் ஆடைகளை வாங்க கலெக்டர் வேண்டுகோள்
/
நெசவாளர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த கதர் ஆடைகளை வாங்க கலெக்டர் வேண்டுகோள்
நெசவாளர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த கதர் ஆடைகளை வாங்க கலெக்டர் வேண்டுகோள்
நெசவாளர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த கதர் ஆடைகளை வாங்க கலெக்டர் வேண்டுகோள்
ADDED : அக் 02, 2024 11:31 PM
கள்ளக்குறிச்சி : அரசு அலுவலர்களும், பொதுமக்களும் கதார் ஆடைகளை வாங்கி நெசவாளர்களுக்கு ஆதரவு அளித்து தீபாவளியை மகிழ்வுடன் கொண்டாட வேண்டுமென கலெக்டர் பிரசாந்த் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கள்ளக்குறிச்சியில் தமிழ்நாடு கதர் கிராம தொழில் வாரியம் மற்றும் செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில், மகாத்மா காந்தியின் 156-வது பிறந்த நாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியில், கலெக்டர் பிரசாந்த் காந்தியடிகளின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து, மலர் துாவி மரியாதை செலுத்தி, தீபாவளி கதர் சிறப்பு விற்பனையை தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து கலெக்டர் பேசும் போது,'' காந்தியடிகளின் சுதந்திர போராட்ட கால சின்னமாக கதர் ஆடை திகழ்கிறது. ஒவ்வொரு இந்தியரும் கதர் ஆடை உடுத்தி, கதர் நெசவாளர் குடும்பங்களின் முன்னேற்றத்திற்கு ஆதரவளிக்க முன்வர வேண்டும். கள்ளக்குறிச்சி மாவட்ட கதர் விற்பனை அங்காடி மூலம், தரமான அசல் கதர் பட்டு புடவை, கதர் பருத்தி மற்றும் பாலியஸ்டர் ரகங்கள், வேஸ்டி, துண்டு, ரெடிமேட் சட்டை, போர்வை, தரமான இலவம் பஞ்சு மெத்தை, மெத்தை விரிப்புகள், தலையணை, தலையணை உறை, குளியல் மற்றும் சலவை சோப்பு வகைகள், தேன் மற்றும் பூஜை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த ஆண்டு கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கதர் விற்பனை குறியீடு ரூ.40 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டு, இலக்கு முழுமையாக எட்டப்பட்டது.
அதேபோல், நடப்பாண்டு விற்பனை குறியீடு ரூ.78 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.தீபாவளி சிறப்பு விற்பனையாக 30 சதவீதம் சிறப்பு தள்ளுபடி வழங்கப்படுகிறது.
அரசு அலுவலர்கள், பொதுமக்கள் கதர் ஆடைகளை வாங்கி கிராம நெசவாளர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தி, தீபாவளி பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாட வேண்டும். என கலெக்டர் பேசினார்.
இதில் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் பிரபாகரன், காதிகிராப்ட் மேலாளர் ஆம்ஸ்ட்ராங், கண்காணிப்பாளர் நரேஷ்குமார் அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.