sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

இறுதி கட்டத்தை எட்டிய கலெக்டர் அலுவலக பணி

/

இறுதி கட்டத்தை எட்டிய கலெக்டர் அலுவலக பணி

இறுதி கட்டத்தை எட்டிய கலெக்டர் அலுவலக பணி

இறுதி கட்டத்தை எட்டிய கலெக்டர் அலுவலக பணி


ADDED : நவ 02, 2025 11:27 PM

Google News

ADDED : நவ 02, 2025 11:27 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் புதிதாக கட்டப்பட்டு வரும் புதிய கலெக்டர் அலுவலக கட்டுமான பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளன.

கள்ளக்குறிச்சி அடுத்த வீரசோழபுரத்தில் பொதுப்பணித்துறை சார்பில் ரூ.139.41 கோடி மதிப்பில் மாவட்ட கலெக்டர் அலுவலகம் கட்டுப்பட்டு வருகிறது. இப்பணிகளை கலெக்டர் பிரசாந்த் ஆய்வு செய்து கூறியதாவது;

மாவட்டத்தின் நிர்வாக பயன்பாட்டிற்காக அனைத்து துறைகளும் ஒரே இடத்தில் செயல்படும் வகையில், வீரசோழபுரத்தில் 35.18 ஏக்கர் பரப்பளவில் 8 தளங்களுடன் மாவட்ட கலெக்டர் அலுவலக கட்டடம் புதிதாக கட்டப்பட்டு வருகிறது. பெரும்பாலான பணிகள் முடிந்து கட்டுமானபணிகள் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. டைல்ஸ் பதித்தல், வர்ணப்பூச்சு, மின்சார வசதி பணிகள் உள்ளிட்ட மீதமுள்ள பணிகள் விரைவாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. புதிய கலெக்டர் அலுவலகம் கூடிய விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும். பணிகளை உடனடியாகவும், தரமாகவும் முடிக்க வேண்டுமென சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என தெரிவித்தார். ஆய்வின்போது பொதுப் பணித்துறை அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.






      Dinamalar
      Follow us