/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
44 மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை
/
44 மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை
ADDED : நவ 02, 2025 11:26 PM
கள்ளக்குறிச்சி: எலவனாசூர்கோட்டையில் நடந்த மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாமில், 44 பேருக்கு தேசிய அடையாள அட்டை வழங்கப்பட்டது.
எலவனாசூர்கோட்டை பாரத் மெட்ரிக்குலேஷன் பள்ளியில் நடந்த 'நலம் காக்கும் ஸ்டாலின்' திட்ட முகாமுடன் இணைந்து, மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை வழங்குவதற்கான சிறப்பு மருத்துவ பரிசோதனை முகாம் நடந்தது.
மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலர் அந்தோணிராஜ் தலைமை தாங்கினார். அரசு எலும்பு முறிவு டாக்டர் பரணீதரன், மனநல டாக்டர் சரஸ்வதி, கண் டாக்டர் சுரேஷ்குமார், காது மூக்கு தொண்டை டாக்டர் இர்பாத்பேகம் ஆகிய மருத்துவ குழுவினர் 129 மாற்றுத்திறனாளிகளை பரிசோதித்தனர்.
அதில் தகுதிவாய்ந்த, 44 பேருக்கு மருத்துவ சான்றுடன் கூடிய தேசிய அடையாள அட்டை வழங்கப்பட்டது. 6 மாற்றுத்திறனாளிகள் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக பரிந்துரைக்கப்பட்டனர்.
75 பேருக்க உதவி உபகரணங்கள் வேண்டி ஆன்லைனில் பதிவேற்றம் செய்யப்பட்டது.

