sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

சமூக வலைதளங்களை கண்காணிக்க பி.ஆர்.ஓ., தலைமையில் குழு அமைப்பு

/

சமூக வலைதளங்களை கண்காணிக்க பி.ஆர்.ஓ., தலைமையில் குழு அமைப்பு

சமூக வலைதளங்களை கண்காணிக்க பி.ஆர்.ஓ., தலைமையில் குழு அமைப்பு

சமூக வலைதளங்களை கண்காணிக்க பி.ஆர்.ஓ., தலைமையில் குழு அமைப்பு


ADDED : மார் 19, 2024 10:42 PM

Google News

ADDED : மார் 19, 2024 10:42 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சமூக வலைதளங்களில் பரவும் வதந்திகளை கண்டறிய, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் தலைமையில் கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.

லோக்சபா தேர்தலையொட்டி சமூக வலைதளங்களில் காழ்ப்புணர்ச்சி காரணமாக தவறான செய்திகள் மற்றும் வதந்திகள் பகிரப்படுகிறது. குறிப்பாக, வாட்ஸ்அப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் மூலமாக பொய்யான செய்திகள் வேகமாக பரவுகிறது.

எனவே, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் லோக்சபா தேர்தல் தொடர்பாக பகிரப்படும் வதந்திகளை கண்டறிய செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் பிரபாகரன் தலைமையில், உதவி செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சிவக்குமார் மேற்பார்வையில் கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.

அதாவது, சமூகவலைதளங்களில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நபர்களை உள்ளடக்கிய குழுக்களின் விபரம் சேகரிக்கப்பட்டு, தீவிரமாக கண்காணிக்கப்படுகிறது. தேர்தலையொட்டி ஓட்டுக்கு பணம் மற்றும் பரிசு பொருள் வழங்குதல், அவதுாறு செய்திகள், தேவையற்ற கருத்துகள் பகிரும் பட்சத்தில் அதை கலெக்டரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும்.

தொடர்ந்து, அதில் தெரிவிக்கப்பட்டுள்ள கருத்தின் உண்மை தன்மை அறிய விசாரணை செய்யப்படும். அதில் பொய்யாக இருந்தால் சமூகவலைதளத்தில் இருந்து வதிந்தியான கருத்தை நீக்குவதுடன், அதை பகிர்ந்த நபர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.






      Dinamalar
      Follow us