/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
சிலிண்டர் வெடித்து விபத்து 3 பிரிவுகளில் வழக்கு பதிவு
/
சிலிண்டர் வெடித்து விபத்து 3 பிரிவுகளில் வழக்கு பதிவு
சிலிண்டர் வெடித்து விபத்து 3 பிரிவுகளில் வழக்கு பதிவு
சிலிண்டர் வெடித்து விபத்து 3 பிரிவுகளில் வழக்கு பதிவு
ADDED : ஜன 21, 2026 08:47 AM
திருக்கோவிலுார்: பலுானுக்கு காற்று நிரப்பும் சிலிண்டர் வெடித்து பெண் பலியான விபத்து குறித்து, மூன்று பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலுார் அடுத்த மணலுார்பேட்டையில், நேற்று முன்தினம் நடந்த ஆற்று திருவிழாவில், திருவண்ணாமலை மாவட்டம், கொளத்துாரை சேர்ந்த ஏழுமலை, 40, ஹீலியம் சிலிண்டரை பயன்படுத்தி பலுானுக்கு காற்று பிடித்து விற்றுக் கொண்டிருந்தார்.
அப்போது திடீரென சிலிண்டர் வெடித்து சிதறியதில், திருவண்ணாமலையை சேர்ந்த கலா, 50, பலியானார். பலுான் விற்ற ஏழுமலை உள்ளிட்ட 18 பேர் படுகாயமடைந்தனர். இதுகுறித்து, மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்து, திருக்கோவிலுார் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இந்த விபத்தில் உயிரிழந்தவர் குடும்பத்திற்கு 3 லட்சம் ரூபாய், படுகாயமடைந்தவர்களுக்கு 1 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

