/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
தாய் திட்டியதால் மகள் தற்கொலை
/
தாய் திட்டியதால் மகள் தற்கொலை
ADDED : ஜன 10, 2025 06:45 AM
தியாகதுருகம்: தியாகதுருகம் அருகே தாய் திட்டியதால் மனம் உடைந்த மகள் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
தியாகதுருகம் அடுத்த சூ.பாலப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த விவசாயி சந்திரசேகர் மகள் கோபிகா; 16. இவர் சித்தேரிப்பட்டு அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தார்.
கடந்த 4 ம் தேதி வீட்டு வேலைகளை செய்யவில்லை என கோபிகாவை தாய் ஜெயந்தி திட்டியுள்ளார். இதனால் மனமுடைந்த கோபிகா, வயலுக்கு தெளிக்கும் பூச்சி மருந்தை குடித்து மயங்கி விழுந்தார்.
உடன் அவரை கிருஷ்ணகிரி தனியார் மருத்துவமனையில் சேர்ந்தனர். அங்கு நேற்று சிகிச்சை பலனின்றி கோபிகா இறந்தார்.
புகாரின்படி தியாகதுருகம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.