ADDED : செப் 29, 2025 01:06 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் காணாமல் போன மகளை கண்டுபிடித்து தரக்கோரி தந்தை போலீசில் புகார் அளித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி அடுத்த பொன்பரப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் வேல்முருகன் மகள் அஸ்விதா, 24; தனியார் மருத்துவமனை செவிலியர்.
கடந்த 26ம் தேதி வழக்கம்போல் பணிக்கு சென்ற அஸ்விதா வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை. அவரது குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
இதனால் மாயமான மகள் அஸ்விதாவை கண்டுபிடித்து தரக்கோரி, அவரது தந்தை வேல்முருகன் போலீசில் புகார் அளித்தார்.
அதன்பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.