ADDED : அக் 25, 2025 07:08 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் வேலைக்கு சென்ற மகளைக் காணவில்லை என தந்தை, போலீசில் புகார் அளித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி அடுத்த அரியபெருமானுாரைச் சேர்ந்தவர் வேல்முருகன் மகள் சந்தியா, 30; பி.இ., பட்டதாரி. இவர் கள்ளக்குறிச்சியில் தனியார் கம்பெனியில் பணிபுரிகிறார்.
கடந்த 23ம் தேதி வேலைக்குச் சென்றவர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
இதுகறித்து அவரது தந்தை வேல்முருகன் அளித்த புகாரின் பேரில், கள்ளக்குறிச்சி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

