ADDED : ஜூலை 12, 2025 03:41 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அருகே மாயமான மகளை கண்டுபிடித்து தரக்கோரி அவரது தாய் போலீசில் புகார் அளித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி அடுத்த எஸ்.ஒகையூர் கிராமத்தை சேர்ந்தவர் வேலு மகள் நதியா, 20; தனியார் பிஸியோதரப்பி கிளினிக்கில் கடந்த 2 மாதங்களாக பணிபுரிந்தார்.
கடந்த 8ம் தேதி காலை வழக்கம்போல் வேலைக்கு சென்ற நதியா, மாலை நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. குடும்பத்தினர் பல இடங்களில் தேடியும் நதியா கிடைக்கவில்லை.
மாயமான தனது மகளை கண்டுபிடித்து தரக்கோரி அவரது தாய் முனியம்மாள் போலீசில் புகார் அளித்தார்.
அதன்பேரில், கள்ளக்குறிச்சி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.