sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

/

கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்


ADDED : பிப் 15, 2024 10:13 PM

Google News

ADDED : பிப் 15, 2024 10:13 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சியில் அனைத்து அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் உள்ளாட்சி பணியாளர்களின் கூட்டமைப்பு சார்பில், 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.

கள்ளக்குறிச்சி தாசில்தார் அலுவலகம் முன், நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, சங்க வட்ட செயலாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கினார். ஓய்வுபெற்றோர் பிரிவு செயலாளர் தண்டபாணி, மாநில செயற்குழு உறுப்பினர் ராஜாராம் முன்னிலை வகித்தனர்.

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துதல், முடக்கி வைக்கப்பட்டுள்ள சரண் விடுப்பு ஒப்படைப்பு மற்றும் உயர் கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வினை உடனடியாக வழங்குதல், அரசு துறைகளில் 30 சதவீதத்திற்கும் மேலாக உள்ள காலி பணியிடங்களை நிரப்புதல், சாலை பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை முறைப்படுத்துதல்.

அரசுத்துறையில் தனியார் முகமை மூலம் பணியாளர்கள் நியமனம் செய்வதை தடை செய்தல், அரசு ஊழியர்களுக்கான ஊதிய முரண்பாட்டை களைதல், சிறப்பு காலமுறை ஊதியம் பெறும் பல்வேறு துறையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்குதல் உட்பட 10 அம்ச கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

வட்டார செயலாளர் சீனுவாசன், வட்ட தலைவர் பாலமுருகன், நிர்வாகிகள் அகிலாண்டேஸ்வரி, தமிழரசி, செல்வி உட்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us