sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

புயலால் பாதித்த விளைநிலங்கள்; வேளாண் இயக்குனர் கள ஆய்வு 

/

புயலால் பாதித்த விளைநிலங்கள்; வேளாண் இயக்குனர் கள ஆய்வு 

புயலால் பாதித்த விளைநிலங்கள்; வேளாண் இயக்குனர் கள ஆய்வு 

புயலால் பாதித்த விளைநிலங்கள்; வேளாண் இயக்குனர் கள ஆய்வு 


ADDED : டிச 06, 2024 10:46 PM

Google News

ADDED : டிச 06, 2024 10:46 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி; திருக்கோவிலுார் தாலுகாவில் பெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட பயிர்களை வேளாண் இயக்குனர் முருகேஷ் ஆய்வு செய்தார்.

திருக்கோவிலுார் தாலுகாவில் 17 ஆயிரத்து 891 எக்டர் பரப்பளவில் நெல், மக்காச்சோளம், உளுந்து, வேர்க்கடலை மற்றும் கரும்பு பயிரிடப்பட்டுள்ளன.

இதில் 6,588 எக்டர் பயிர்கள் பெஞ்சல் புயலால் பாதிப்புக்குள்ளானது.

இந்த பாதிப்புகளை கணக்கெடுக்கும் வகையில் வேளாண் இயக்குனர் முருகேஷ் கள ஆய்வு செய்தார்.

திருக்கோவிலுார் தாலுகா, கூவனுார், மிளாரிப்பட்டு கிராமங்களில் 482 எக்டர் பரப்பளவிலான பயிர்களை பார்வையிட்ட அவர், பாதிக்கப்பட்ட பயிர்களை முழுமையாக கள ஆய்வு செய்து கணக்கிட வேண்டும்.

பாதிப்பு இல்லாத பயிர்களுக்கு மழை நீர் வடிந்த உடன் உரிய பயிர் பாதுகாப்பு முறைகளை பின்பற்றி பயிர்களை பாதுக்காத்திட விவசாயிகளுக்கு அறிவுறுத்த வேண்டும் என அலுவலர்களுக்கு அறிவுறுத்தினர்.

ஆய்வின்போது வேளாண் இணை இயக்குனர் சத்தியமூர்த்தி, துணை இயக்குனர்கள் விஜயராகவன், அன்பழகன், உதவி இயக்குனர்கள், விவசாயிகள் உடனிருந்தனர்.






      Dinamalar
      Follow us