/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
மாவட்ட கூட்டுறவு வளர்ச்சிக்குழு கூட்டம்
/
மாவட்ட கூட்டுறவு வளர்ச்சிக்குழு கூட்டம்
ADDED : மார் 09, 2024 03:17 AM
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் மாவட்ட கூட்டுறவு வளர்ச்சிக்குழு கூட்டம் நடந்தது.
கூட்டுறவு அமைப்புகளை வலுப்படுத்தவும், கூட்டுறவுத் துறையில் செயல்படுத்தப்படும் புதிய திட்டங்களை கண்காணித்திடவும் குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவின் முதல் கூட்டம் நேற்று கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடந்தது. கூட்டத்திற்கு, கலெக்டர் ஷ்ரவன்குமார் தலைமை தாங்கினார். டி.ஆர்.ஓ., சத்தியநாராயணன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குனர் தனபதி, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் முருகேசன், வேளாண் இணை இயக்குனர் அசோக்குமார் மற்றும் கூட்டுறவுத் துறை, பால்வளத் துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.
கூட்டத்தில், கூட்டுறவுத் துறையில் செயல்படுத்தப்படும் திட்டங்கள், செயல்படுத்தப்பட உள்ள திட்டங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
அதில், கூட்டுறவு சங்கங்களில் உறுப்பினர் சேர்க்கை மற்றும் கடனுதவிகளை அதிகரிக்க வேண்டும். கூட்டுறவு சங்கங்களின் உட்கட்டமைப்புகளை மேம்படுத்த வேண்டும். கூட்டுறவு சங்கங்கள் இல்லாத கிராமங்களை கண்டறிந்து அவற்றில் பால் கூட்டுறவு சங்கங்கள் அமைக்க வேண்டும் என கலெக்டர் அறிவுறுத்தினார்.

