/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
தி.மு.க., நிர்வாகி தாக்கு: போலீஸ் விசாரணை
/
தி.மு.க., நிர்வாகி தாக்கு: போலீஸ் விசாரணை
ADDED : மே 27, 2025 12:15 AM
திருக்கோவிலுார், : அரகண்டநல்லுாரில், தி.மு.க., கிளைச் செயலாளர் தாக்கப்பட்ட வழக்கில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அரகண்டநல்லுார் அடுத்த சு.கொல்லுார் கிராமத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன், 40; தி.மு.க., கிளைச் செயலாளர். அதே பகுதியைச் சேர்ந்தவர் செந்தில், 40; தி.மு.க., உறுப்பினர். நண்பர்கள். இருவரும் கடந்த 24ம் தேதி இரவு 10:00 மணிக்கு வடகரைதாழனுார் கூட்ரோட்டில் உள்ள ஹோட்டல் ஒன்றில் சாப்பிட சென்றனர்.
அப்போது அங்கிருந்த மணம்பூண்டி ஒன்றிய தி.மு.க., செயலாளர் பிரபுவிடம், கடந்த நான்கு ஆண்டுகளாக அரசால் தனக்கு வழங்கப்படும் டெண்டர் பணிகள் எதுவும் கொடுக்கவில்லை. எனது கிராமத்தில் எந்த வேலையும் செய்யவில்லை. எங்கள் ஊருக்கு எந்த பலனும் கிடைக்கவில்லை என கேட்டு மணிகண்டன் தகராறு செய்தார்.
இதனால், ஆத்திரமடைந்த பிரபு தனது ஆதரவாளரான ஒன்றிய அவைத் தலைவர் சக்தி சிவம், 55; வைரவன், 45; ஆகியோருடன் சேர்ந்து மணிகண்டன், செந்தில் ஆகியோரை தாக்கினார். பலத்த காயம் அடைந்த மணிகண்டன், செந்தில் இருவரும் திருக்கோவிலுார் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
இருதரப்பினரும் அளித்த புகாரின் பேரில், அரகண்டநல்லுார் போலீசார் விசாரித்து வருகின்றனர்.