ADDED : டிச 11, 2024 06:18 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருக்கோவிலுார் : பெஞ்சல் புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அரகண்டநல்லுார் பேரூராட்சி பகுதியில் தி.மு.க., சார்பில் நிவாரண உதவி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
நிகழ்ச்சிக்கு, பேரூராட்சி சேர்மன் அன்பு தலைமை தாங்கி, நிவாரண உதவியாக வேட்டி, புடவை, அரிசி உள்ளிட்ட பொருட்களை வழங்கினர்.
பேரூராட்சி துணை சேர்மன் கதீஜா பிவி, நகர துணைச் செயலாளர் சீனிவாசன், நகர இளைஞரணி அமைப்பாளர் தினகரன், பொருளாளர் காமராஜ், ஒன்றிய பிரதிநிதிகள் ராஜ்மோகன், மொபின்கான் உட்பட பலர் பங்கேற்றனர்.