sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

சொத்து அபகரித்த வழக்கில் ஆவண எழுத்தர் கைது

/

சொத்து அபகரித்த வழக்கில் ஆவண எழுத்தர் கைது

சொத்து அபகரித்த வழக்கில் ஆவண எழுத்தர் கைது

சொத்து அபகரித்த வழக்கில் ஆவண எழுத்தர் கைது


ADDED : ஜூலை 26, 2025 08:09 AM

Google News

ADDED : ஜூலை 26, 2025 08:09 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி அருகே போலி ஆவணம் பயன்படுத்தி சொத்தை அபகரித்த வழக்கில், ஆவண எழுத்தரை போலீசார் கைது செய்தனர்.

கள்ளக்குறிச்சி அடுத்த ரங்கநாதபுரத்தை சேர்ந்தவர் சீனிவாசன் மனைவி அமுதா, 59; இவருக்கு சொந்தமான அரியபெருமானுார் கிராம எல்லையில் உள்ள 660 சதுரடி நிலத்தை போலி ஆவணம் பயன்படுத்தி சிலர் அபகரித்தனர்.

இது குறித்து அமுதா அளித்த புகாரின் பேரில், ராஜேந்திரன் மனைவி கல்யாணி, இவரது மகன் செந்தில், பிச்சபிள்ளை மகன் சிவக்குமார் மற்றும் ஆவண எழுத்தர் செல்வம், வழக்கறிஞர்கள், சார்பதிவாளர்கள் என மொத்தம் 9 பேர் மீது கடந்த ஜூன் மாதம் கள்ளக்குறிச்சி போலீசார் வழக்கு பதிந்தனர். இதில், ராஜேந்திரன் மகன் செந்தில், 42; கடந்த 10ம் தேதி கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில், வில்லங்கம் பார்க்காமல் பட்டா ஆவணத்தை மட்டும் வைத்து கல்யாணி மற்றும் செந்தில் ஆகியோருக்கு தான செட்டில்மென்ட் ஆவணத்தை தயார் செய்து கொடுத்த ஆவண எழுத்தர் செல்வம், 53; என்பவரை கள்ளக்குறிச்சி போலீசார் நேற்று கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us