/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
பெண்ணுக்கு தொல்லை முதியவர் கைது
/
பெண்ணுக்கு தொல்லை முதியவர் கைது
ADDED : அக் 31, 2025 02:45 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி:  கள்ளக்குறிச்சி மாவட்டம், பொன்பரப்பட்டை சேர்ந்தவர் மாரி மகன் கலியன்,65; இவர், கடந்த 27ம் தேதி கள்ளக்குறிச்சியில் வசிக்கும் தனது உறவினரான 27 வயது பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார்.
மேலும், கலியன் அசிங்கமாக திட்டி, கத்தியை காட்டி பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில்,  கள்ளக்குறிச்சி போலீசார் வழக்கு பதிந்து கலியனை கைது செய்தனர்.

