ADDED : ஜன 02, 2025 06:31 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சின்னசேலம்; கூகையூர் கிராமத்தில் மது போதையில் தவறி விழுந்த முதியவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
சின்னசேலம் அடுத்த விஜயபுரம் கிராமத்தை சேர்ந்தவர் மொட்டையன் மகன் குப்புசாமி 70, பொம்மை வியாபாரியான இவர் கடந்த 30ம் தேதி கூகையூர் கிராமத்தில் நடந்த தனது உறவினர் இறப்பிற்கு சென்றுள்ளார். அங்கு மது அருந்திவிட்டு குப்புசாமி மீண்டும் தனது ஊருக்கு செல்வதற்காக பஸ் நிறுத்தத்திற்கு வந்துள்ளார்.
அப்போது நிலை தடுமாறி கீழே விழுந்ததில் குப்புசாமிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடன் இருந்தவர்கள் அவரை மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி குப்புசாமி நேற்று பரிதாபமாக இறந்தார். சின்ன சேலம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.