நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி: சின்னசேலம் அருகே வயிற்று வலியால் பூச்சு மருந்து குடித்த முதியவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
சின்னசேலம் அடுத்த பாண்டியங்குப்பம் முருகேசன்,65; இவருக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டு வந்துள்ளது. கடந்த 26 ம் தேதி மாலை 4 மணிக்கு வயிற்சி வலி அதிகமானதால், மனமுடைந்து அவர் வீட்டில் இருந்த பூச்சு மருந்தை குடித்து மயங்கி விழுந்தார்.
உடன் வீட்டில் இருந்தவர்கள் அவரை மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் அவர் இறந்தார்.
புகாரின் பேரில் சின்னசேலம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.