ADDED : ஜன 22, 2025 11:33 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மூங்கில்துறைப்பட்டு; நடந்து சென்றபோது தவறி விழுந்த மூதாட்டி உயிரிழந்தார்.
மூங்கில்துறைப்பட்டு அடுத்த புதுப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் ராஜி மனைவி முத்தாள், 60; இவர் நேற்று சாலையில் நடந்து சென்றபோது, தவறி கீழே விழுந்தார்.
அதில் காயமடைந்த அவரை கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் இறந்தார்.
வடப்பொன்பரப்பி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

