sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

தேர்தல் பறக்கும் படைக்கு ஊதியம் குறைவால் அதிருப்தி

/

தேர்தல் பறக்கும் படைக்கு ஊதியம் குறைவால் அதிருப்தி

தேர்தல் பறக்கும் படைக்கு ஊதியம் குறைவால் அதிருப்தி

தேர்தல் பறக்கும் படைக்கு ஊதியம் குறைவால் அதிருப்தி


ADDED : டிச 31, 2024 06:36 AM

Google News

ADDED : டிச 31, 2024 06:36 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ரிஷிவந்தியம் பகுதியில் தேர்தல் பணியாற்றிய பறக்கும் படையினருக்கு ரூ. 8,500 மட்டுமே பயணப்படி வழங்கப்பட்டிருப்பது பணியில் ஈடுபட்ட ஊழியர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் பணியாற்றிய தேர்தல் பணியாளர்களுக்கு குறிப்பாக பறக்கும்படை உள்ளிட்ட பிரிவில் பணியாற்றிய போலீசார், வருவாய்த்துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்களுக்கு அதற்கான படி வழங்கப்பட்டு வருகிறது.

சங்கராபுரம், திருக்கோவிலூர் தொகுதிகளில் பணியாற்றிய பறக்கும் படை அலுவலர்களுக்கு ரூ. 20,500 முதல் 24, 500 வரை அடிப்படை சம்பளத்தின் விகிதாச்சாரத்தின் அடிப்படையில் வழங்கப் பட்டுள்ளது.

அதே நேரம் ரிஷிவந்தியம் தொகுதியில் பணியாற்றிய பறக்கும் படையினருக்கு ரூ. 8,500 மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. திருக்கோவிலூர் பகுதியைச் சேர்ந்த போலீசார் உள்ளிட்ட அலுவலர்கள் ரிஷிவந்தியம் தொகுதி, சங்கராபுரம் தொகுதி, திருக்கோவிலூர் தொகுதிகளில் பணியாற்றிய நிலையில், ரிஷிவந்தியம் தொகுதியில் பணியாற்றியவர்களுக்கு மட்டும் ஊதியம் குறைவாக வழங்கப்பட்டிருப்பது ஊழியர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாரபட்சமின்றி தேர்தல் படியை வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ரிஷிவந்தியம் தொகுதியில் பணியாற்றிய ஊழியர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு உள்ளது.






      Dinamalar
      Follow us