sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

லோக்சபா தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட முன்னாள் படைவீரர்கள் விண்ணப்பிக்கலாம்

/

லோக்சபா தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட முன்னாள் படைவீரர்கள் விண்ணப்பிக்கலாம்

லோக்சபா தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட முன்னாள் படைவீரர்கள் விண்ணப்பிக்கலாம்

லோக்சபா தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட முன்னாள் படைவீரர்கள் விண்ணப்பிக்கலாம்


ADDED : மார் 19, 2024 10:39 PM

Google News

ADDED : மார் 19, 2024 10:39 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் லோக்சபா தேர்தலையொட்டி 60 வயதுக்குட்பட்ட முன்னாள் படைவீரர்கள், சிறப்பு காவலர்களாக பாதுகாப்பு பணிக்கு ஈடுபடுத்தப்பட உள்ளதாக கலெக்டர் தெரிவித்துள்ளார்.

கள்ளக்குறிச்சி மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான ஷ்ரவன்குமார் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: லோக்சபா தேர்தலையொட்டி, 60 வயதுக்குட்பட்ட முன்னாள் படைவீரர்கள், சிறப்பு காவலராக பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

எனவே, விருப்பமுள்ள திட காத்திரமான முன்னாள் படைவீரர்கள் விழுப்புரம் மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் அலுவலகத்திற்கு நேரில் சென்று, தங்களது அசல் படைப்பணிச்சான்று, அடையாளஅட்டை சமர்ப்பித்து பதிவு செய்ய வேண்டும். சி.எஸ்.டி., கேண்டீனில் வேலை நாட்களில் பெயர் பதிவு செய்யப்படும்.

விடுமுறை நாட்களிலும் பதிவு செய்யலாம். இது தொடர்பான கூடுதல் விபரங்களுக்கு 04146 - 220524 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு கேட்டறியலாம். படைப்பணியினை விட்டு வெளிவந்த முன்னாள் இளநிலை படை அலுவலர்கள் மற்றும் முன்னாள் படைவீரர்களுக்கு தேர்தல் காலத்தில் பணிபுரிய உரிய ஊதியம் வழங்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us