/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
விஷம் குடித்து விவசாயி தற்கொலை
/
விஷம் குடித்து விவசாயி தற்கொலை
ADDED : டிச 09, 2025 03:49 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் மது பழக்கத்தால் விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
கள்ளக்குறிச்சி அடுத்த புத்தந்துாரைச் சேர்ந்தவர் பெரியசாமி, 52; விவசாயி. குடிப்பழக்கத்திற்கு அடிமையான இவர், தினமும் குடிப்பது வழக்கம். இது தொடர்பாக அவரது குடும்பத்தினர் கண்டித்துள்ளனர்.
இதனால், மனமுடைந்த அவர், கடந்த 4ம் தேதி பிற்பகல் 3:00 மணிக்கு அப்பகுதியில் உள்ள விவசாய நிலத்தில் பூச்சு மருந்து குடித்து மயங்கி விழுந்தார்.
உடன், கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கு அவர் இறந்தார்.
புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

