sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

நிலத் தகராறில் கத்திக்குத்து விவசாயிக்கு 8 ஆண்டு சிறை

/

நிலத் தகராறில் கத்திக்குத்து விவசாயிக்கு 8 ஆண்டு சிறை

நிலத் தகராறில் கத்திக்குத்து விவசாயிக்கு 8 ஆண்டு சிறை

நிலத் தகராறில் கத்திக்குத்து விவசாயிக்கு 8 ஆண்டு சிறை


ADDED : டிச 20, 2024 05:54 AM

Google News

ADDED : டிச 20, 2024 05:54 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உளுந்துார்பேட்டை: உளுந்துார்பேட்டை அருகே நிலத் தகராறில் ஒருவரை கத்தியால் குத்திய வழக்கில் விவசாயிக்கு 8 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்துார்பேட்டை அடுத்த ஆசனுாரைச் சேர்ந்தவர் பாபு, 55; அதே பகுதியைச் சேர்ந்தவர் பிரகாஷ், 56; விவசாயிகளான இருவருக்கும் இடையே நிலத்தகராறில் முன்விரோதம் இருந்தது.

கடந்த 2016ம் ஆண்டு அக்டோபர் 23ம் தேதி இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில், பிரகாஷ், பாபுவை கத்தியால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார். படுகாயமடைந்த பாபு புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றார்.

புகாரின் பேரில், எடைக்கல் போலீசார் வழக்கு பதிந்து பிரகாஷை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை, உளுந்துார்பேட்டை சார்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

அரசு வழக்கறிஞர் இளமுருகன் ஆஜரானார். வழக்கை விசாரித்த நீதிபதி ஆறுமுகம் நேற்று தீர்ப்பளித்தார். அதில், பிரகாஷுக்கு 8 ஆண்டு சிறையும், 11 ஆயிரம் ரூபாய். அபராதமும் விதித்து தீர்ப்பு அளித்தார். பிரகாஷ் கடலுார் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.






      Dinamalar
      Follow us