sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 20, 2025 ,கார்த்திகை 4, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

 உளுந்து பயிருக்கு உகந்த மழை சாகுபடி; விவசாயிகள் மகிழ்ச்சி

/

 உளுந்து பயிருக்கு உகந்த மழை சாகுபடி; விவசாயிகள் மகிழ்ச்சி

 உளுந்து பயிருக்கு உகந்த மழை சாகுபடி; விவசாயிகள் மகிழ்ச்சி

 உளுந்து பயிருக்கு உகந்த மழை சாகுபடி; விவசாயிகள் மகிழ்ச்சி


ADDED : நவ 20, 2025 05:38 AM

Google News

ADDED : நவ 20, 2025 05:38 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தியாகதுருகம்: மானாவாரியில் சாகுபடி செய்த உளுந்து பயிருக்கு தற்போது பெய்யும் மழை நல்ல ஊட்டத்தை தரும் என்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

தியாகதுருகம் சுற்றுவட்டார கிராமங்களில் ஆண்டுதோறும் அக்., மாதத்தில் மானாவாரி பயிராக உளுந்து சாகுபடி செய்கின்றனர். வடகிழக்கு பருவமழை ஈரத்தைக் கொண்டு பயிர் செழித்து வளர்ந்து மகசூலை கொடுக்கிறது. பராமரிப்பது எளிது குறுகிய காலத்தில் அறுவடைக்கு தயாராகும். உளுந்துக்கு நல்ல விலை கிடைப்பதால் இதன் சாகுபடி அதிக பரப்பில் மேற்கொள்ளப்படுகிறது.

கடந்த 20 நாட்களுக்கு முன் பெய்த மழை ஈரம் கொண்டு உளுந்து விதைப்பு பணிகளை முடித்தனர். செடி வளரும் நிலையில் நேற்று முன்தினம் தியாகதுருகம் பகுதியில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக கன மழை பெய்தது.

இது உளுந்து பயிருக்கு ஊட்டத்தை கொடுத்து செழித்து வளர கை கொடுக்கும். தகுந்த தருணத்தில் மழை பெய்திருப்பது உளுந்து சாகுபடி செய்த விவசாயிகளை மகிழ்ச்சியடைய செய்துள்ளது.






      Dinamalar
      Follow us