sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 29, 2025 ,மார்கழி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

 மழையை எதிர்பார்க்கும் மானாவாரி சாகுபடி செய்த விவசாயிகள்

/

 மழையை எதிர்பார்க்கும் மானாவாரி சாகுபடி செய்த விவசாயிகள்

 மழையை எதிர்பார்க்கும் மானாவாரி சாகுபடி செய்த விவசாயிகள்

 மழையை எதிர்பார்க்கும் மானாவாரி சாகுபடி செய்த விவசாயிகள்


ADDED : டிச 29, 2025 06:19 AM

Google News

ADDED : டிச 29, 2025 06:19 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தியாகதுருகம்: மானாவாரி உளுந்து பயிர் தண்ணீர் இன்றி வாடுவதால் மழையை எதிர்பார்த்து விவசாயிகள் கவலையுடன் காத்திருக்கின்றனர்.

தியாகதுருகம் சுற்றுவட்டார கிராமங்களில் 2,000 ஏக்கர் பரப்பில் மானாவாரி நிலங்களில் உளுந்து பயிர் சாகுபடி செய்துள்ளனர். கடந்த அக்., மாதம் பெய்த மழை ஈரத்தை பயன்படுத்தி விதைப்பு பணிகளை முடித்தனர். அதைத் தொடர்ந்து அவ்வப்போது பெய்த வடகிழக்கு பருவமழையால் செடிகள் வளர்ந்து அதிக பூக்களுடன் காய்க்க துவங்கியது.

இம்மாத முதல் வாரத்தில் டிட்வா புயல் காரணமாக லேசான மழை பெய்தது. அதன் பிறகு 20 நாட்களுக்கு மேலாக மழை பெய்யாமல் இரவு நேரங்களில் பனிப்பொழிவு உள்ளது. வழக்கமாக டிச., மாத இறுதியில் வடகிழக்கு பருவமழை தீவிரமாக பெய்யும். அதற்கு எதிர் மாறாக பனிப்பொழிவும் பகல் நேரத்தில் வெயிலின் தாக்கமும் அதிகமாக இருப்பதால் உளுந்து பயிர்கள் தண்ணீர் இன்றி வாடிய நிலையில் காணப்படுகிறது.

தற்போது உளுந்து செடிகளில் பிஞ்சுகள் முதிர்வு பெறும் தருவாயில் உள்ளதால் மழை பெய்தால் மட்டுமே மகசூல் அதிகரிக்கும். வடகிழக்கு பருவ மழை இறுதி கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில், மழை பெய்து உளுந்து சாகுபடி செழிக்க கை கொடுக்குமா என்று விவசாயிகள் கவலையுடன் எதிர்பார்க் கின்றனர்.






      Dinamalar
      Follow us